Thursday, January 23, 2014

9.லிங்க கட்டு .

பிரியாணி அரிசி 1/2 படியை 3/4 வேக்காட்டில் இறக்கி காயவைத்து 1 பலம் பூநீறு கலந்து குழி தைலம் வாங்கி லிங்கத்திற்கு சுருக்கிடவும்.


தாய் 4 க்கு 1 சேர்த்தரைத்து (தங்கத்தை திராவகத்தால் பொடியாக்கி லிங்கத்துடன் )மதியை உருக்கி 4 க்கு 1 தர வயது 6.மேற்படி மதி 6,ரவி 4, கட்டிய நாகம் 3,சேர்த்து உருக்க வேதை.

மேலும் விவரங்களுக்கு :


           whats App no.+91 9894618455.

Wednesday, January 22, 2014

8.செம்பு சுத்தி ( வேறு )

மனோசிலையை ஆகாச தாமரை இலைச்சாற்றில் அரைத்து தாம்பிர தகட்டிற்கு இருபுறமும் பூசி புடமிட வெட்டை. இந்த வெட்டையை இடித்தது சட்டியில் போட்டு எலுமிச்சை சாறும்.புளியிலை சாறும்,சேர்த்து சுண்ட காய்ச்சிய பின்பு தண்ணீரில் பிசறி தெளிவு இருக்கவும்,இப்படி பலமுறை செய்ய சுத்த தாமிரம் அடியில் தங்கி இருக்கும்.பின்பு இடைக்கு இடை வெண்காரம் கொடுத்துருக்க சுத்தமான தாமிரம் கிடைக்கும். 

மேலும் விவரங்களுக்கு :


           whats App no.+91 9894618455.

7.செம்பு சுத்தி (வேறு )

வெண்காரம்  18 கிராம் 
வீரம்                 18 கிராம் 
துருசு                18 கிராம் 
குட்டி தக்காளி சாறு அல்லது அவுரி சாறு விட்டு மேற்படி சரக்குகளை அரைத்து 100 கிராம் செம்பு தகடிற்கு பூசி அகலிலிட்டு சீலை செய்து 25 எருவில் புடம் 10 க்கு  1 மதி சேர்த்து உருக்கி மேற்படி சரக்குகளை நாயுருவி இலை சாறு அல்லது நெருஞ்சி இலை சாறு விட்டு அரைத்து தகட்டிற்கு பூசி 25 எரு புடம் சுத்தியாகும். 
மேலும் விவரங்களுக்கு :


           whats App no.+91 9894618455.

6.செம்பு சுத்தி

நவசார கட்டு 
வெங்கார  கட்டு 
அண்டசுண்ணம் 
சம எடை எடுத்து செம்பு உருக்கு முகத்தில் கொடுக்க சுத்தியாகும்.(சுத்தியான செம்பு ரோஜா பூ இதழ் போல் இருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு :


           whats App no.+91 9894618455.

Monday, August 26, 2013

5.பூநாகச் செம்பு ,

பூநாகம் 175 கிராம்,பச்சை கற்பூரம் 9 கிராம்,கோவை இலைச்சாற்றில் அரைத்து வில்லை தட்டி காயவைத்து 20 எருவில் புடமிட்டு எடுத்து,மறுபடியும் வெங்காரம் பாதி சேர்த்து கோவை சாற்றால் அரைத்து 10 வரட்டியில் புடமிட்டு எடுத்து அதை காடியில் கரைத்து 4 நாள் கழித்து தெளிவிருத்து வண்டலை காயவைத்து சுரண்டி எடுத்து மூசையிலிட்டு உருக்க பூநாகா செம்பு ஆகும்.மதியில் வேதை.

மேலும் விவரங்களுக்கு :


           whats App no.+91 9894618455.

Wednesday, August 21, 2013

4.ரசக்கிண்ணி (துருசினால்).

துருசு 40 விராகனெடை,
ரசம்    40 விராகனெடை,

துருசை பொடி செய்து அய சட்டியில் பாதி போட்டு அந்த பொடியில் பள்ளம் செய்து ரசம் விட்டு மேல்பாதி பொடியை போட்டு எலுமிச்சம் பழசாறு விட்டு இருகின பின்,10 பழத்தை அறுத்து பிழிந்து விட்டு அப்படியே எடுத்துவைத்து விட்டு,மறுநாள் காலையில் எடுத்து அடுப்பில் வைத்து காய்ச்சி,சாறு வற்றியபின் எடுத்து தண்ணீர் விட்டு கழுவி ரசத்தை எடுத்து உருட்டிக் கிண்ணி செய்து தண்ணீரில் வைத்து இறுகிய பின் எடுக்கவும்.

மேலும் விவரங்களுக்கு :


           whats App no.+91 9894618455.

Monday, August 19, 2013

3.தாமிர வேதை

அருகம் வேரும்,கீரிப்பூண்டும் குப்பைமேனி சாறு விட்டரைத்துக் குகை செய்து அதற்குள் செம்பு வைத்து சீலை செய்து கெஜ புடமிட சுத்தியாகும்.அதை நாலுக்கு ஒன்று மதி கொடுக்க ஆறு வயது.

மேலும் விவரங்களுக்கு :


           whats App no.+91 9894618455.